Tamil Literature MCQ Quiz in मराठी - Objective Question with Answer for Tamil Literature - मोफत PDF डाउनलोड करा

Last updated on Mar 7, 2025

पाईये Tamil Literature उत्तरे आणि तपशीलवार उपायांसह एकाधिक निवड प्रश्न (MCQ क्विझ). हे मोफत डाउनलोड करा Tamil Literature एमसीक्यू क्विझ पीडीएफ आणि बँकिंग, एसएससी, रेल्वे, यूपीएससी, स्टेट पीएससी यासारख्या तुमच्या आगामी परीक्षांची तयारी करा.

Latest Tamil Literature MCQ Objective Questions

Top Tamil Literature MCQ Objective Questions

Tamil Literature Question 1:

அகநானூறு மணிமிடைவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?

  1. 100
  2. 120
  3. 180
  4. 160

Answer (Detailed Solution Below)

Option 3 : 180

Tamil Literature Question 1 Detailed Solution

சரியான பதில்: 180
Key Points
அகநானூறு: 
  • பாடல்கள் - 400
  • பாடியவர்கள் - 145 பேர்
  • பாவகை - ஆசிரியப்பா
  • அடி எல்லை - 13-31
  • தொகுத்தவர் - உருத்திர சன்மார்
  • தொகுப்பித்தவர் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
  • கடவுள் வாழ்த்து பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • பாயிரம் பாடியவர் - வில்லவதரையன்
  • முதலில் பதிப்பித்தவர் - வே ராசகோபால ஐயங்கார்
  • முதலில் உரை எழுதியவர் - நா. மு. வேங்கடசாமி நாட்டார்
  • வேறுபெயர்கள் - நெடுந்தொகை, அகப்பாட்டு, நெடும்பாட்டு, நெடுந்தோகை நானூறு, அகம், பெருந்தொகை நானூறு
  • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. அவை:
    • களிற்றியானைநிரை - முதல் 120 பாடல்கள்
    • மணிமிடை பவளம் - 180 பாடல்கள்
    • நித்திலக் கோவை - இறுதி 100 பாடல்கள்
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஆகும்
  • இது சங்க இலக்கியத்துள் வரலாற்று செய்திகளை மிக அதிகமாக கூறும் அக நூல் ஆகும்.
  • இது குடவோலைத் தேர்தல் குறித்து கூறும் நூல் ஆகும்.
Additional Informationஅகநானூறு ஒழுங்கு முறையில் தொடுக்கப்பட்ட ஒரே தொகை நூல் ஆகும். இதில்:
  • 1,3,5,7,... என ஒற்றைப்படையாக வருவன பாலை திணை பாடல்கள் (200 பாடல்கள்) ஆகும்.
  • 2,8,12,18,... என வருவன குறிஞ்சி திணை பாடல்கள் (80 பாடல்கள்) ஆகும்.
  • 4,14,24,34,... என வருவன முல்லை திணை பாடல்கள் (40 பாடல்கள்) ஆகும்.
  • 6,16,26,36,... என வருவன மருதம் திணை பாடல்கள் (40 பாடல்கள்) ஆகும்.
  • 10,20,30,40,... என வருவன நெய்தல் திணை பாடல்கள் (40 பாடல்கள்) ஆகும்

Tamil Literature Question 2:

'தேடிய செல்வத்தைச் செலவழிக்காமல் 

புதைத்து வைப்பது மடமை' - என்று கூறியவர் யார்?

  1. கபிலர்
  2. பரணர்
  3. காக்கைபாடினியார்
  4. ஒளவையார்

Answer (Detailed Solution Below)

Option 4 : ஒளவையார்

Tamil Literature Question 2 Detailed Solution

சரியான விடை: ஒளவையார். Key Points

  • மேற்கண்ட வரிகளை இயற்றியவர் - ஔவையார்.

ஔவையார்:

  • ஔவையார் என பெயர் கொண்ட பல பெண் புலவர்கள் இருந்துள்ளனர்.
  • சங்ககால ஔவையார்
    • சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் புறநானூறுஅகநானூறுநற்றிணைகுறுந்தொகை ஆகிய நூல்களில் பாடல்களை இயற்றியுள்ளார்.
    • இவருடைய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் ஆகும்.
  • இடைக்கால ஔவையார்:
    • இடைக்காலத்தில் வாழ்ந்த ஔவையார் அங்கவை சங்கவை திருமணத்தை நடத்தியவர்.
    • இவருடைய காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முன் ஆகும்.
  • சோழர் காலத்தில் (கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு) வாழ்ந்த ஔவையார் நல்வழிமூதுரைஅசதிக்கோவைகொன்றை வேந்தன்ஆத்திச்சூடி ஆகியவற்றை இயற்றியவர்.
  • சமய புலவராக (கி.பி. பதினான்காம் நூற்றாண்டு) வாழ்ந்த ஔவையார் ஔவை குறள்விநாயகர் அகவல் ஆகியவற்றை இயற்றியவர்.

Additional Informationகாக்கைபாடினியார்:

  • சங்ககால பெண் புலவர்.
  • இயற்பெயர்: நச்செள்ளை.
  • காக்கையை பாடியதால் இவர் காக்கைப்பாடினியார் என அழைக்கப்பட்டார்.
  • இவர் எழுதியதாக குறுந்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் 12 பாடல்கள் கிடைத்துள்ளன.

பரணர்:

  • பரணர் என பெயர் கொண்ட பல புலவர்கள் இருந்துள்ளனர்.
  • சங்க காலத்தில் வாழ்ந்த பரணர் புகழ்ப் பெற்றவர்.
  • இவர் எழுதியதாக அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் 85 பாடல்கள் கிடைத்துள்ளன.

கபிலர்:

  • கபிலர் எனும் பெயரில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.
  • ங்க காலத்தில் வாழ்ந்த கபிலர் முக்கியத்துவம் வாய்ந்தவர்.
  • இவர் குறுஞ்சித்திணை பாடுவதில் வல்லவர்.
  • இவர் எழுதியதாக கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் பாடல்கள் கிடைத்துள்ளன.
  • இவரும் இன்னா நாற்பது நூலை இயற்றிய கபிலரும் ஒருவரல்லர்.

Tamil Literature Question 3:

செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்த பருவமாக விளங்குகிறது?

  1. இரண்டாம் பருவம் 
  2. ஐந்தாம் பருவம்
  3. முதற் பருவம்
  4. மூன்றாம் பருவம்

Answer (Detailed Solution Below)

Option 1 : இரண்டாம் பருவம் 

Tamil Literature Question 3 Detailed Solution

சரியான பதில்: இரண்டாம் பருவம்
Key Pointsபிள்ளைத்தமிழ்:
  • இது பெரியவர்களைக் குழந்தையாக பாவித்துப் பாடும் இலக்கியம் ஆகும்.
  • இதன் வேறு பெயர்கள் - பிள்ளை கவி, பிள்ளை பாட்டு ஆகும்.
  • இது குழவி மருங்கினும் கிழவதாகும் என்ற தொல்காப்பிய இலக்கணத்தால் சுட்டப்படும் இலக்கியம் ஆகும்.
  • இது குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் ஒற்றைப்படை மாதத்தில் 3,5,7,... என 21ஆம் மாதம் வரை பாடப்படும்.
  • பிள்ளைத் தமிழ் பாட முடியாமல் விலக்கப்பட்ட ஒரே கடவுள் சிவன் ஆவார்.
  • பிள்ளைத் தமிழ் இரண்டு வகைப்படும். அவை:
    • ஆண்பால் பிள்ளைத்தமிழ்
    • பெண்பாற் பிள்ளைத்தமிழ்
  • பிள்ளைத்தமிழின் முன்னோடி பெரியாழ்வார் ஆவார்.
  • முதல் பிள்ளைத்தமிழ் குலோத்துங்க பிள்ளைத்தமிழ் ஆகும்.
  • ஆண் பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண் பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் முதல் ஏழு பருவங்கள் ஆகும்.

ஆண்பால் பிள்ளைத்தமிழ்:

  • ஆணுக்கு 16 வயது வரை பாடலாம்.
  • அரச குமாரர்களுக்கு முடி சூட்டிய பிறகு பாடக்கூடாது.
  • இது பத்து பருவங்களை கொண்டது.
  • பருவத்துக்கு பத்து பாடல்களாக 100 பாடல்களை கொண்டது.
  • ஆண்பால் பிள்ளைத்தமிழின் 10 பருவங்கள்:
    • காப்பு - 3ஆம் திங்கள்
    • செங்கீரை - 5ஆம் திங்கள்
    • தால் - 7ஆம் திங்கள்
    • சப்பாணி - 9ஆம் திங்கள்
    • முத்தம் - 11ஆம் திங்கள்
    • வருகை - 13ஆம் திங்கள்
    • அம்புலி - 15ஆம் திங்கள்
    • சிற்றில் சிதைத்தல் - 17ஆம் திங்கள் 
    • சிறுதேர் உருட்டல் - 19ஆம் திங்கள்
    • சிறுபறை கொட்டல் - 21ஆம் திங்கள்
Additional Informationபெண்பாற் பிள்ளைத் தமிழ்:
  • பெண்ணுக்கு பூப்புத் தொடங்கும் வரை பாடலாம்.
  • இது பத்து பருவங்களை கொண்டது.
  • பருவத்துக்கு பத்து பாடல்களாக 100 பாடல்களை கொண்டது.
  • பெண்பாற் பிள்ளைத்தமிழின் 10 பருவங்கள்:
    • காப்பு - 3ஆம் திங்கள்
    • செங்கீரை - 5ஆம் திங்கள்
    • தால் - 7ஆம் திங்கள்
    • சப்பாணி - 9ஆம் திங்கள்
    • முத்தம் - 11ஆம் திங்கள்
    • வருகை - 13ஆம் திங்கள்
    • அம்புலி - 15ஆம் திங்கள்
    • கழங்கு - 17ஆம் திங்கள்
    • அம்மானை/ நீராடல் - 19ஆம் திங்கள்
    • ஊசல் - 21ஆம் திங்கள்

Tamil Literature Question 4:

நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

  1. பன்னாடு தந்த மாறன் வழுதி
  2. இளம் பெருவழுதி
  3. உக்கிரப் பெருவழுதி
  4. பாண்டியன் மாறன் வழுதி

Answer (Detailed Solution Below)

Option 1 : பன்னாடு தந்த மாறன் வழுதி

Tamil Literature Question 4 Detailed Solution

சரியான பதில் பன்னாடு தந்த மாறன் வழுதி
Key Points
  • ந ற்றிணை:
    • தொகுத்தவர் பெயர் தெரியவில்லை
    • தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
    • 275 புலவர்கள் பாடியுள்ளனர்
    • மொத்தம் 400 பாடல்கள் உள்ளன
    • ஆசிரியப்பாவால் ஆனது
    • அடி எல்லை 9-12
    • பாவகை = ஆசிரியப்பா
    • வேறு பெயர்கள் = நற்றிணை நானூறு, தூதின் வழிகாட்டி
Additional Information
  •  அகநானூறு: 
    • அகநானூறு = அகம் + நான்கு + நூறு
    • பாடல்கள் = 400
    • பாடியவர்கள் = 145 பேர்
    • பாவகை = ஆசிரியப்பா
    • அடி எல்லை = 13-31
    • தொகுத்தவர் = உருத்திர சன்மார்
    • தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
    • வேறு பெயர்கள் = நெடுந்தொகை, அகப்பாட்டு, நெடும்பாட்டு, நெடுந்தோகை நானூறு, அகம், பெருந்தொகை நானூறு

Tamil Literature Question 5:

‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____.

  1. தொல்காப்பியம்
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. சிலப்பதிகாரம்

Answer (Detailed Solution Below)

Option 1 : தொல்காப்பியம்

Tamil Literature Question 5 Detailed Solution

சரியான பதில்: தொல்காப்பியம்Key Points

  • 'வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் தொல்காப்பியம் ஆகும்.
  • சேர, சோழ, பாண்டியன் தமிழகத்தின் மூவேந்தர்கள் ஆவர்.

தொல்காப்பியம்:

  • ஆசிரியர்: தொல்காப்பியர்
  • இயல்கள்: 27
  • இந்நூல் தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூல் ஆகும்.
  • தொல்காப்பியம் 1610 நூற்பாக்களாலானது
  • தொல்காப்பியம் உரையாசிரியர்கள்: இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார்.
  • இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது.

Additional Informationசிலப்பதிகாரம்:

  • ஆசிரியர்: இளங்கோவடிகள்
  • காதைகள்: 30
  • அடிகள்: 5001 
  • பாவகை: நிலைமண்டில ஆசிரியப்பா
  • சமயம்: சமணம்
  • சிறந்த உரை எழுதியவர்: அடியார்க்கு நல்லார்
  • சிறப்புப் பெயர்கள்: முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம், மூவேந்தர் காப்பியம், புரட்சிக் காப்பியம், பொதுமை காப்பியம்.
  • காண்டங்கள் மற்றும் காதைகள்:
  • புகார்க் காண்டம் - 10 காதைகள்
  • மதுரைக் காண்டம் - 13 காதைகள்
  • வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்
  • இது ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகும்.

புறநானூறு:

  • இது புறத்திணைப் பற்றிக் கூறும் நூலாகும்.
  • இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது.
  • புறநானூறு 4 அடிச்சிற்றெல்லையும், 40 அடிப் பேரெல்லையும் கொண்டது.
  • பாவகை: ஆசிரியப்பா
  • தொகுத்தவர்: பெயர் தெரியவில்லை
  • தொகுப்பித்தவர்: பெயர் தெரியவில்லை
  • புறநானுற்றை முதன்முதலாக பதிப்பித்தவர் உ. வே. சா ஆவார்.
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

அகநானூறு:

  • பாடல்கள்: 400
  • பாடியவர்கள்: 145 பேர்
  • பாவகை: ஆசிரியப்பா
  • அடி எல்லை: 13 - 31
  • தொகுத்தவர்: உருத்திர சன்மார்
  • தொகுப்பித்தவர்: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
  • கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • பாயிரம் பாடியவர்: வில்லவதரையன்
  • முதலில் பதிப்பித்தவர்: வே ராசகோபால ஐயங்கார்
  • முதலில் உரை எழுதியவர்: நா. மு. வேங்கடசாமி நாட்டார்
  • சிறப்புப் பெயர்கள்: நெடுந்தொகை, அகப்பாட்டு, நெடும்பாட்டு, நெடுந்தொகை நானூறு, அகம், பெருந்தொகை நானூறு.
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஆகும்.
  • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. அவை,
    • களிற்றியானைநிரை - முதல் 120 பாடல்கள்
    • மணிமிடை பவளம் - 180 பாடல்கள்
    • நித்திலக் கோவை - இறுதி 100 பாடல்கள்

Tamil Literature Question 6:

இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் _______

  1. நாட்டைக் கைப்பற்றல்
  2. ஆநிரை கவர்தல்
  3. வலிமையை நிலைநாட்டல்
  4. கோட்டையை முற்றுகையிடல்

Answer (Detailed Solution Below)

Option 3 : வலிமையை நிலைநாட்டல்

Tamil Literature Question 6 Detailed Solution

சரியான பதில்: வலிமையை நிலைநாட்டல்

Key Points

  • இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் வலிமையை நிலைநாட்டல் ஆகும்.

தும்பைத் திணை:

  • பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச்சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை ஆகும்

வாகைத்திணை:

  • ​போரில் வெற்றி பெற்ற மன்னனுக்கு வாகைப்பூ சூடி மகிழ்வது, வாகைத்திணை ஆகும்.
  • வாகை என்றாலே வெற்றி பொருள் ஆகும்.

வெட்சித் திணை:

  • ​ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்ந்துவர வெட்சிப் பூவினைச் சூடிக் கொண்டு செல்வர்.எனவே ஆநிரை கவர்தல் வெட்சித் திணை ஆகும்.

உழிஞைத்திணை:

  • மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை ஆகும்.​

Additional Information

கரந்தைத் திணை:

  • கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மீட்க கரந்தைப் பூவைச் சூடிக் கொண்டு செல்வது கரந்தைத் திணை ஆகும்.

வஞ்சித்திணை:

  • மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை ஆகும்.​

காஞ்சித் திணை:

  • தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு, காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை ஆகும்.​

நொச்சித்திணை:

  • கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு நொச்சிப் பூவைச் சூடி உள்ளிருந்தே போரிடுவது நொச்சித்திணை ஆகும்.​

Tamil Literature Question 7:

ஆண்டாள் பாடிய நூல் எது?

  1. திருவெம்பாவை
  2. தைப்பாவை
  3. திருப்பாவை
  4. காவியப் பாவை

Answer (Detailed Solution Below)

Option 3 : திருப்பாவை

Tamil Literature Question 7 Detailed Solution

சரியான பதில்: திருப்பாவை
Key Points
திருப்பாவை: 
  • இதில் பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும்.
  • இது 30 பாடல்களால் ஆனது.
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 - 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.
  • இது வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையை சேர்ந்த பாக்களால் ஆனது.
  • இதில் வரும் பாவை என்னும் சொல் பெண்ணைக் குறிக்கும்.
  • திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர் இராமானுஜர் ஆவார். 
  • இது மார்கழி மாதம் பாடப்படுவது ஆகும்.
  • திருப்பாவை ஜீயர் என்று அழைக்கப்படுபவர் இராமானுஜர் ஆவார்.
Additional Informationதிருவெம்பாவை:
  • இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர் ஆவார்.
  • இது சைவ கடவுளான சிவபெருமானைக் குறித்து பாடிய நூல் ஆகும். 
தைப்பாவை: 
  • இது கண்ணதாசன் எழுதிய நூல் ஆகும்.
காவியப்பாவை: 
  • இது முடியரசன் எழுதிய நூல் ஆகும்

Tamil Literature Question 8:

குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்?

  1. முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
  2. குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
  3. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
  4. மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

Answer (Detailed Solution Below)

Option 3 : குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

Tamil Literature Question 8 Detailed Solution

சரியான பதில்: குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்.

 Key Points

  • குளிர் காலத்தைப் பெரும்பொழுதாகக் கொண்ட நிலங்கள் குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் ஆகும்.

பெரும்பொழுது:

  • ஓர் ஆண்டானது ஆறு பெரும்பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • அவை கார் காலம், குளிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் ஆகும்.

Additional Information

  • கார் காலம் - ஆவணி, புரட்டாசி
  • குளிர் காலம் - ஐப்பசி, கார்த்திகை
  • முன்பனிக் காலம் - மார்கழி, தை
  • பின்பனிக் காலம் - மாசி, பங்குனி
  • இளவேனிற் காலம் - சித்திரை, வைகாசி
  • முதுவேனிற் காலம் - ஆனி, ஆடி
    திணை  பெரும்பொழுது
    குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம்
    முல்லை கார்காலம்
    மருதம் ஆறு பெரும்பொழுதுகள்
    நெய்தல் ஆறு பெரும்பொழுதுகள்
    பாலை இளவேனில், முதுவேனில், பின்பனிக்காலம்

Tamil Literature Question 9:

சங்கப்பாடல்களில் கூடுதலான பாடல்களைப்பாடிய புலவர் யார்?

  1. கபிலர்
  2. ஔவையார்
  3. இளங்கீரனார் 
  4. அள்ளூர் நன்முல்லையார் 

Answer (Detailed Solution Below)

Option 1 : கபிலர்

Tamil Literature Question 9 Detailed Solution

சரியான பதில்: கபிலர்

Key Points

  • சங்கப்பாடல்களில் கூடுதலான பாடல்களைப்பாடிய புலவர் கபிலர் ஆவார்.

கபிலர்:

  • ​ஊர்: திருவாதவூரில்
  • இவர் 235 பாடல்கள் பாடியுள்ளார்.
  • சிறப்புப் பெயர்: குறிஞ்சி பாடிய கபிலர்
  • இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்கள்:
    • புறநானூறு
    • பதிற்றுப்பத்து 
    • அகநானூறு
    • குறுந்தொகை
    • நற்றிணை

Additional Informationஒளவையார்‌:

  • இவர் 59 பாடல்கள் பாடியுள்ளார்.
  • எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
  • இவர் அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவர் ஆவார்.

இளங்கீரனார்:

  • இவர் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர் ஆவார்.
  • இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்கள்:
    • அகநானூறு
    • குறுந்தொகை
    • நற்றிணை
  • பாடிய திணைகள்: குறிஞ்சித்திணை, பாலைத்திணை

அள்ளூர் நன்முல்லையார்:

  • இவர்  சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர் ஆவார்.
  • இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்கள்:
    • அகநானூறு
    • குறுந்தொகை
    • புறநானூறு

Tamil Literature Question 10:

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது ?

  1. படை கவசம்
  2. படை கருவிகள்
  3. கைப்பொருள்
  4. வலிமையான ஆயுதம்

Answer (Detailed Solution Below)

Option 3 : கைப்பொருள்

Tamil Literature Question 10 Detailed Solution

சரியான பதில்: கைப்பொருள்
Key Points
  • இக்குறள் பொருட்பாலில் உள்ள கூழியலில் பொருள் செயல் வகை என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
  • இதில் வரும் கைத்தொன்று என்பதன் பொருள் கைப்பொருள் ஆகும்.
  • குறளின் பொருள்:
    • தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் காண்பது போன்றது என்பதாகும்.
Additional Informationதிருக்குறள்:
  • ஆசிரியர் - திருவள்ளுவர்
  • பாவகை - குறள் வெண்பா
  • அதிகாரம் - 133
  • குறள்கள் - 1330
  • பால்கள் - 3
  • இயல்கள் - 9
  • வேறு பெயர்கள் - பொதுமறை, தமிழ் மறை, உலகப்பொதுமறை, முப்பால் நூல், உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, திருவள்ளுவ பயன், பொருளுறை, முதுமொழி, திருவள்ளுவம், தமிழர் திருமறை, தமிழ் மாதின் இனிய உயர்நிலை, அறவிலக்கியம்
  • திருவள்ளுவர் காலம் - கி மு 31 ஆம் நூற்றாண்டு  
  • இந்த ஆண்டை தொடக்கமாக கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது
  • இது 3 பால்களை கொண்டுள்ளது. அவை:
    • அறத்துப்பால் - 38 அதிகாரம்
    • பொருட்பால் - 70 அதிகாரம்
    • காமத்துப்பால் - 25 அதிகாரம்
  • பொருட்பால் 3 இயல்களை கொண்டுள்ளது. அவை:
    • அரசியல் - 25 அதிகாரம்
    • அங்கவியல் - 32 அதிகாரம்
    • ஒழிபியல் - 13 அதிகாரம்
  • அறத்துப்பால் 4 இயல்களை கொண்டுள்ளது. அவை:
    • பாயிறவியல் - 4 அதிகாரம்
    • இல்லறவியல் - 20 அதிகாரம்
    • துறவறவியல் - 13 அதிகாரம்
    • ஊழியல் - 1 அதிகாரம்
  • காமத்துப்பால் 2 இயல்களை கொண்டுள்ளது. அவை:
    • களவியல் - 7 அதிகாரம்
    • கற்பியல் - 18 அதிகாரம்
Get Free Access Now
Hot Links: teen patti bonus teen patti rules teen patti joy apk teen patti boss